சீமானின் மனைவி கெஞ்சியும் அடித்து இழுத்துச் சென்ற பொலிஸ்- வைரல் வீடியோ !

சீமானின் மனைவி கெஞ்சியும் அடித்து இழுத்துச் சென்ற பொலிஸ்- வைரல் வீடியோ !

செந்தமிழன் சீமான் அவர்களின் மனைவி கெஞ்சியும், பொலிசார் அவரது வீட்டுக் காகவலாளியை இழுத்துச் சென்ற காட்சிகள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, பல உலக நாடுகளிலும் வைரலாக பரவி வருகிறது. ( வீடியோ கீழே உள்ளது)

சீமானின் சிங்கார வீட்டு, பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் நீலாங்கரையில் உள்ளது. சுமார் 10 கோடி பெறுமதியான பெரும் ஆடம்பர வீட்டில் சீமான் வசித்து வரும் நிலையில் அங்கே பல காவலாளிகள் உள்ளார்கள். பொதுவாக இவர்கள் மிகவும் முரட்டுத்தனமாகவர்கள். குதிரைக்கு கொம்பு முளைத்தது போல, தாம் சீமான் வீட்டில் பாதுகாவலர்கள் என்ற துணிச்சலில், விசாரிக்க வந்த பொலிசார் மீது கை வைத்து விட்டார்கள்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அசிட்டன் கமிஷனர், நேரடியாகச் சென்று, சீமான் வீட்டில் தமிழக பொலிசார் மீதே கை வைத்த நபரை தர தர என்று இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினார்கள். இதனை தடுக்க வெளியே ஓடி வந்த , சீமானின் மனைவி கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார். பின்னர் மன்னிப்பும் கோரினார். ஆனால் பொலிசார் விடவே இல்லை.

இதேவேளை எங்கள் தலைவன் யார் என்று தெரியாமல் என் மேல் கை வைக்கிறாயா ? என்று கைதாகும் போது அந்த நபர் கூச்சல் போட … யாரா இருந்தால் எனக்கு என்னடா ? பொலிஸ் மீதே கை வைப்பீர்களா ? என்று கேட்டபடியே கமிஷனர் , அவரை இழுத்துச் செல்லும் காட்சி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.