வடகிழக்கு இங்கிலாந்தில் அமெரிக்க இராணுவத்திற்காக ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் கப்பல், ஒரு கொள்கலன் கப்பலுடன் திங்கட்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலில் இரு கப்பல்களிலும் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் இரு குழுவினரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான டன் ஜெட் எரிபொருளை சுமந்து செல்லக்கூடிய டேங்கர் கப்பல், சிறிய கொள்கலன் கப்பல் மோதியபோது நங்கூரமிட்டிருந்தது.
டேங்கர் கப்பலின் சரக்கு தொட்டி உடைந்து கடலில் எரிபொருளை வெளியிட்டது என்று அதன் இயக்குனரான ஸ்டெனா பல்க் கூறினார். இந்த சம்பவத்தில் தீங்கிழைக்கும் செயல்கள் அல்லது பிற நபர்கள் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று இரண்டு கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
பிரித்தானியாவின் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில், விபத்தினை அடுத்து 36 பணியாளர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது. போர்த்துகீசிய கொடியுடன் கூடிய சரக்கு கப்பலான சோலாங் இன் குழு உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.