மேற்கு ஜெர்மனியிலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபருக்கான பெரிய தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
வெயிட்ஃபெல்ட் (Weitefeld), வெஸ்டர்வால்ட் (Westerwald) பகுதியில் உள்ள சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தபோது, சந்தேக நபர் தப்பிச் சென்றதாக ஜெர்மன் பத்திரிகை முகமையின் வழியாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 47 வயதுடைய ஆண், 44 வயதுடைய பெண் மற்றும் 16 வயதுடைய சிறுவன் எனக் கூறப்படுகிறது.
சுற்றுப்புற மக்களை வீடுகளில் இருக்கும்படியும், பயணிகளில் யாரையும் நம்பி ஏற்றிக்கொள்ள வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Bild பத்திரிகை தெரிவித்ததாவது, ஒரு சிறப்பு விசேடப் படை சம்பவ இடத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தேடுதலுக்காக ஒரு போலீஸ் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
சுமார் 2,200 மக்கள்தொகையைக் கொண்ட வெயிட்ஃபெல்ட் கிராமம் முழுவதுமாக சுற்றுக்களத்தில் வைக்கப்பட்டு, வெளியேறும் மற்றும் உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுகின்றன.
சந்தேக நபர் கைது செய்யப்படும் வரை தேடுதல் தொடரும் என்றும், இரவிலும் இந்த நடவடிக்கை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
Bild-இற்குப் பேட்டியளித்த போலீஸ் பேச்சாளர் ஒருவர், இந்தக் கொடூர சம்பவம் குறித்த அவசர அழைப்பு காலை 3:45 மணிக்கு (உள்நாட்டு நேரப்படி) வந்ததாக கூறினார்.
வெயிட்ஃபெல்ட் நகர மேயர் கார்ல்-ஹைன்ஸ் கெஸ்லர் கூறுகையில், “இந்த கிராமத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இங்கு மக்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள்” என்றார்.
அதேசமயம், பல ஆண்டுகளாக அந்த பகுதியில் இருந்தவர்கள் தான் உயிரிழந்தவர்களும் சந்தேக நபரும் எனவும் அவர் தெரிவித்தார்.