1,212 உக்ரைன் ராணுவத்தின் உடல்களை கொடுத்த ரஷ்யா: என்ன தான் நடக்கிறது ?

1,212 உக்ரைன் ராணுவத்தின் உடல்களை கொடுத்த ரஷ்யா: என்ன தான் நடக்கிறது ?

உக்ரைன் ஸ்பைடர் வெப் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது என்று, அனைத்து மேற்கு உலக மீடியாக்களும் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில். நேற்றைய தினம்(11) ரஷ்யா 1,212 உக்ரைன் ராணுவத்தின் உடல்களை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளது. இதேவேளை வெறும் 28 ரஷ்ய ராணுவத்தின் உடல்களை உக்ரைன் ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது.

இந்த 1,212 உக்ரைன் ராணுவத்தினர் எங்கே கொல்லப்பட்டார்கள் ? எப்படி இது நடந்தது ? இல்லையென்றா; எங்கே நடந்தது என்பது தொடர்பாக 2 நாடுகளும் வாயே திறக்கவில்லை. ஆனால் போரில் உக்ரைன் பலமாக தாக்குவது போல ஒரு தோற்றப்பாடே தற்போது கூட நிலவி வருகிறது.

குறிப்பாக முன்னேறி வரும் ரஷ்ய படைகளிடம் இவர்கள் சிக்கியிருக்க வேண்டும். இதேவேளை “”கேஷ்”” என்னும் ரஷ்ய நகரத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றி வைத்திருந்தவேளை, அங்கே நடந்த தாக்குதலில் 1,044 உக்ரைன் ராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். இவர்களது உடலை ஏற்கனவே ரஷ்யா சில மாதங்களுக்கு முன்னர் தான் கொடுத்தது.

இப்படி ஆயிரக் கணக்கில் உக்ரைன் ராணுவத்தினர் எப்படி கொல்லப்படுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுவரை 500 ரஷ்ய ராணுவ உடல்களை உக்ரைன் ரஷ்யாவுக்கு கொடுக்கவில்லை. அப்படி என்றால் இந்தப் போரில் என்ன தான் நடக்கிறது என்பது, முன்னுக்குப் பின் முரனாகவே செய்தி வெளியாகி வருகிறது.