சொந்த மகனால் கதறிய அனிதா எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது மக்களே

சொந்த மகனால் கதறிய அனிதா எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது  மக்களே

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகளான வனிதா விஜயகுமார் சொத்து தகராறு காரணமாக அந்த குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு தற்போது தனியாக தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இவரது மூத்த மகன் தான் ஸ்ரீஹரி. ஸ்ரீஹரி தனது அம்மாவை பிரிந்து தாத்தா விஜயகுமாருடன் தான் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீஹரி வளர்ந்து தற்போது ஹீரோவாக பிரபு சாலமோன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மேம்பூ’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் லாஞ்ச் விழா அண்மையில் நடைபெற்றது.

அப்போது ஸ்ரீஹரி தனது தாத்தா விஜயகுமாருடன் வந்து கலந்து கொண்டார். இது குறித்து வனிதா விஜயகுமார் பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை என்னுடைய மூத்த மகன் நடிகனாக மாறி இருக்கிறார்.

அவருக்கு வாழ்த்துக்கள் என்று விஜய் ஸ்ரீஹரியை டேக் செய்து இருக்கிறார். அதோடு என்னுடைய மகனுக்காக கதை கேட்டு ஆசிர்வாதம் செய்த ரஜினி அங்கிளுக்கு ரொம்பவும் நன்றி. என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது. அவன் இன்னும் மேலும் அதிகமாக வளர வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் வனிதா மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

வனிதா , வனிதா விஜயகுமார் , வனிதா மகன், vanitha vijayakumar , vanitha vijayakumar son , srihari