வீட்டு லோன் கட்ட காசு இல்ல.. அதனால் அந்த படத்துல நடிச்சேன்!

வீட்டு லோன் கட்ட காசு இல்ல.. அதனால் அந்த படத்துல நடிச்சேன்!

நடிகை பிரியா ஆனந்த் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “அந்தகன்” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் .இந்த திரைப்படம் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது.

இப்படத்தின் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிரியா ஆனந்த் மற்றும் பட குழு தீவிரம் காட்டி வருகின்றனர். அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியா ஆனந்திடம் நீங்கள் காசுக்காக வேறு ஏதாவது வேலை பார்த்திருக்கிறீர்களா? என கேட்டதற்கு இதை விட அதிகமா காசு எங்க குடுக்குறாங்க சொல்லுங்க?

நான் நடிக்க வந்த புதிதில் வீட்டு லோன் கட்ட காசு இல்லை. அந்த சமயத்தில் பணத் தேவைக்காக நான் ஒரு படத்தின் கதையை கூட கேட்காமல் நடித்தேன் என பிரியா ஆனந்த் ஓபன் ஆக பேசி இருக்கிறார். சென்னை தமிழ் பெண்ணான பிரியா ஆனந்த் வாமனன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாகி தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியா ஆனந்த் , priya anand , cinema news ,