ஐஸ்வர்யா ராய் ஒன்றும் என் மகள் கிடையாது… நான் ஏன் அப்படி இருக்கணும்? ஜெயா பச்சன் காட்டம்!

ஐஸ்வர்யா ராய் ஒன்றும் என் மகள் கிடையாது… நான் ஏன் அப்படி இருக்கணும்? ஜெயா பச்சன் காட்டம்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலமாகத்தான் சினிமா உலகத்திலேயே அறிமுகமானார். முன்னதாக 1994 ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை துவங்கிய ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

இதனிடையே சமீப நாட்களாக. ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சை இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி தொடர்ந்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஆன ஜெயா பச்சன் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதில் ஜெயா பச்சன் நீங்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மாவா? ஸ்ட்ரிக்ட்டான மாமியாரா?என்று கேள்வி கேட்கிறார்கள்… அதற்கு அவர்… மகளுக்கும் மருமகளுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. நான் என்னுடைய மக்களிடம் ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்கொள்வேன். ஏனென்றால் அவர் என்னுடைய மகள் பெற்றோருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என கூறுவேன்.

ஆனால், மருமகளிடம் நான் அப்படி நடந்து கொள்ள முடியாது…. ஏனென்றால் அவள் என் மகள் இல்லை… அவளிடம் நான் எப்படி ஸ்ட்ரிக்ட் ஆக நடந்து கொள்ள முடியும்? அவருடைய அம்மா அவரிடம் ஸ்ட்ரிட் ஆக நடந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன் என்று மருமகளையும் மகளையும் பிரித்து பேசி இருக்கிறார். இதுவே ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராயிடம் எப்படி நடந்து கொள்வார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

ஐஸ்வர்யா ராய் , ஜெயா பச்சன், aishwarya rai , cinema news , Kollywood news