நஸ்ரியாவை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணேன்… பகீர் கிளப்பிய 53வயது நடிகர்!

நஸ்ரியாவை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணேன்… பகீர் கிளப்பிய 53வயது நடிகர்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படுவர் நஸ்ரியா. இவர் கேரளாவை சேர்ந்த நடிகை என்பதால் பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் தமிழில் இவர் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதை எடுத்து ராஜா ராணி திரைப்படத்தில் நேரடியாக நடித்து கதாநாயகியாக பெரும் புகழ்பெற்றார்.

இந்த படத்தில் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது. நையாண்டி , திருமணம் என்னும் நிக்கா ,வாயை மூடி பேசவும் ,பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நஸ்ரியா தமிழில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

ஒவ்வொரு படத்திலும் தனது க்யூட்டான நடிப்பும் க்யூட்டான எக்ஸ்பிரஷனும் வெகு சீக்கிரமாகவே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இதனால் இவருக்கு ஏகோபித்த ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தனர். இந்நிலையில் நஸ்ரியா உடன் நையாண்டி திரைப்படத்தில் அவரின் அப்பாவாக நடித்த பிரபல நடிகரான ஆடுகளம் நரேன் என அழைக்கப்படும் நாராயணன் பேட்டி ஒன்றில் அப்படத்தில் நஸ்ரியா உடன் நடித்தது குறித்து பகிர்ந்து கொண்டார்.

அதாவது நான் நையாண்டி படத்தில் நஸ்ரியாவின் அப்பாவாக நடித்திருந்தேன் அந்த படத்தில் ரொம்ப பாசமாக என் மகளான ரசிரியாவை கட்டிப்பிடித்து பேச வேண்டும். அந்த காட்சியில் என்னை அறியாமல் நான் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டேன். எல்லோரும் அந்த சீன் ரொம்ப சூப்பரா பக்காவா வந்திருக்கு அப்படின்னு பாராட்டினாங்க.

ஆனால், எனக்குள்ள ஒரு பயம் ஏன் அப்படின்னா முன்னதாக முன்கூட்டியே இது போன்று முத்தம் கொடுக்கும் காட்சி எடுக்க சொல்லி எடுக்கப்படவில்லை. இதனால் உடனடியாக மன்னிப்பு கேட்டேன் அதற்கு அவர் அவருடைய அப்பாவை கூட்டிட்டு வந்து இது ரியல் அச்சான். நீங்க ரீல் அச்சன் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூறினார். அவரைப் போல சிறந்த நடிகை நான் இதுவரை பார்த்ததில்லை என நாராயணன் அந்த பேட்டியில் எமோஷ்னலாக பேசினார்.