இரவில் அந்த பழக்கம்… விடமுடியாமல் தவிக்கும் சுனைனா!

இரவில் அந்த பழக்கம்… விடமுடியாமல் தவிக்கும் சுனைனா!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நடிகை சுனைனா தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் குறிப்பாக தமிழில் நகுல் உடன் வெளிவந்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.

மிக சிறந்த நடிகையாக முதல் படத்தில் பெயர் எடுத்த சுனைனாவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதன்படி வம்சம், நீர் பறவை, சமர், வன்மம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இதில் நீர்ப்பறவை திரைப்படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி காட்டினார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு இருக்கும் கெட்ட பழக்கம் ஒன்றை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அதாவது இரவு நேரத்தில் எனக்கு அதிகமாக மொபைல் மற்றும் லேப்டாப் யூஸ் பண்ணும் பழக்கம் இருக்கிறது. அத்துடன் இரவு நேரங்களில் தான் டீ, காபி குடிக்க ரொம்பவும் பிடிக்கும் அதை இரண்டையும் நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் எனக்கு அந்த கெட்ட பழக்கத்தை மாற்றவே முடியவில்லை என வெளிப்படையாக கூறினார்.