மீண்டும் எஸ் எம் எஸ் பாணியில் படமா… சந்தானம் ஓக்கே சொல்லணுமே! ஜீவா ஜாலி பதில்

மீண்டும் எஸ் எம் எஸ் பாணியில் படமா… சந்தானம் ஓக்கே சொல்லணுமே! ஜீவா ஜாலி பதில்

இயக்குனர் எம் ராஜேஷின் முதல் படம் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவா தன் கேரியரின் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார். சிவா மனசுல சக்தியின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்கி தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்தார் ராஜேஷ். கதையே இல்லாமல் எப்படி ஹிட் தருகிறார் என எல்லோருக்கும் ஆச்சரியம். அந்த திருஷ்டி நான்காவது படத்தில் கழிந்தது.

அடுத்தடுத்து அவர் இயக்கிய அனைத்து படங்களும் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. அதுபோல ஜீவாவும் மோசமான படங்களாகக் கொடுத்து மார்க்கெட் அவுட் ஆனார். அதனால் இப்போது இருவருமே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னையில் ஒரு தியேட்டரில் சிவா மனசுல சக்தி படம் ரி ரிலீஸ் செய்யப்பட, ரசிகர்கள் அரங்கு நிறைந்த காட்சியாக ஆர்ப்பரித்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜீவா “இந்த படம் முதலில் ரிலீஸ் ஆகும் போது முதல் காட்சியில் கூட்டம் இல்லை. ஆனால் அதன் பிறகு படம் பிக்கப் ஆனது. இந்த படம் ஒரு வைப். மீண்டும் இப்படி ஒரு படம் எடுங்கள் என கூறுகிறார்கள். நாங்கள் ரெடியாகதான் இருக்கிறோம். சந்தானத்திடம்தான் இதுபற்றி கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.