25 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்-விஜய் பட இயக்குனர்!

25 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்-விஜய் பட இயக்குனர்!

விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில்.

இப்போது அவர் விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இயக்குனர் எழில் திரையரங்குக்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.

இதை முன்னிட்டு ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். அதில் அவரோடு இணைந்து பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது.