அந்த விசயத்துக்காக 25 லட்சம் வாங்கினேனா? நடிகை பூனம்…

அந்த விசயத்துக்காக 25 லட்சம் வாங்கினேனா? நடிகை பூனம்…

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக உலாவந்து கொண்டிருப்பவர் நடிகை பூனம் பாண்டே. பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி வீடியோக்களை பகிர்ந்தும் பிரபலமான பூனம் பாண்டே, சில நாட்களுக்கு முன் புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கபட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த நாளே, நான் உயிரோடு தான் இருக்கிறேன் என் வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பினார். இந்த விசயம் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி, அவரின் தவறான பிரமோஷன் ஏகப்பட்ட பின் விளைவுகளை ஏற்படுத்தி ஜெயிலுக்கு போகும் நிலைக்கு தள்ளிவிடும் என்றெல்லாம் இணையத்தில் கருத்துக்கள் கிளம்பியது.

ஆபாச படங்களில் நடித்து, திடீரென அன்னை தெராசாவாக மாறிவிட்டதற்கு பின்னணியில் பூனம் பாண்டே 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கி தான் இந்த விழுப்புணர்வு செய்துள்ளார் என்று பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் பூனம் பாண்டே இதுபற்றி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதில், எந்த அறிவும் இல்லாமல் இப்படி செய்யவில்லை. யாருடைய உணர்வையும் புண்படுத்தவில்லை என்றும் என் அம்மாவுக்கு தொண்டையில் கேன்சர் பாதிக்கப்பட்டவர் தான் என்று கூறியிருக்கிறார்.

மேலும் 25 லட்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததற்கு, ஒரு பைசாக்கூட வாங்கவில்லை. Schbang என்ற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து கர்ப்பவாய் புற்றுநோய் விழிப்புணர்வு செய்ததாகவும் நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.