நடிச்சது போதும் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு வேற வேலைய பாரு – கறார் காட்டிய சிவகுமார்!

நடிச்சது போதும் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு வேற வேலைய பாரு – கறார் காட்டிய சிவகுமார்!

நடிகர் சூர்யா சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டம் அது. நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து சந்திப்போமா, உயிரிலே கலந்து உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அவருக்கு அது பேசும் படியான படமாக அமையவே இல்லை.

இதனால் சிவக்குமார் தனது மகனை சினிமாவிலிருந்து ஒதுக்கி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவரை நடிக்கவே வேண்டாம் என் பெயர் கெட்டுப் போய்விடும் போல என கூறி சினிமா பக்கமே அவரை போக விடாமல் தடுத்து இருக்கிறார். அந்த சமயத்தில் தான் பிரண்ட்ஸ் பட வாய்ப்பு சூர்யாவுக்கு கொடுக்க சூர்யாவின் வீட்டை தேடி வந்துள்ளார் இயக்குனர்கள் சித்திக், அப்பச்சன், சேகர் இவர்கள் மூன்று பேரும்.

ஆனால் சூர்யாவின் தந்தையோ, அவன் இனிமேல் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டான். அவன் இப்ப கிரிக்கெட் விளையாட போயிருக்கான் தயவு செய்து நீங்கள் போய் விடுங்கள். அவனை சிஏ படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என திட்டத்தில் நாங்கள் குடும்பமே இறங்கி இருக்கிறோம் என சூர்யா தந்தை அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால், அந்த சமயத்தில் சூர்யாவின் அம்மா பின்பக்கமாக வந்து சூர்யாவுக்கு சினிமா தான் உயிர் தம்பி அவருக்கு எப்படியாவது சான்ஸ் கொடுங்கள் என அட்ரஸ் கொடுத்து விட்டு சென்றார்களாம். அதன் பின்னர் சூர்யா அங்கு சென்று பட வாய்ப்பு பெற்றிருக்கிறார். ஒருவேளை அந்த படத்தை சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் கூட ஒருவேளை அந்த படத்தை சூர்யாவுக்கு சம்பளமே கொடுக்கவில்லை என்றாலும் கூட சூர்யா ஒன்றுமே கேட்டிருக்க மாட்டார். அந்த அளவிற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என அப்போது காத்து கிடந்தார்,.