அயலான் படத்தில் பணியாற்றிய வி எஃப் எக்ஸ் குழுவினரைப் பாராட்டிய சூர்யா!

அயலான் படத்தில் பணியாற்றிய வி எஃப் எக்ஸ் குழுவினரைப் பாராட்டிய சூர்யா!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பொங்கல் ரிலீசில் இந்த படம் தான் வின்னர் என்று கூறப்படுகிறது. இந்த படம் நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள நடிகர் சூர்யா, படத்தில் பணியாற்றியுள்ள வி எஃப் எக்ஸ் குழுவினரை பாராட்டி பூச்செண்டை அனுப்பியுள்ளார். அதில் “வி எஃப் எக்ஸ் குழுவினரின் பணியைப் பார்த்து வியந்தேன். உங்கள் பணியின் மீதான காதலை இது காட்டுகிறது. பிரமாதமான அவுட்புட். அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.