மார்க்கெட் இருந்தபோதே சினிமாவில் விலக காரணம் – பாவனா Open Talk!

மார்க்கெட் இருந்தபோதே சினிமாவில் விலக காரணம் – பாவனா Open Talk!

கேரளாவை பூர்வீகமாக கொண்டவரான நடிகை பாவனா தமிழ், தெலுங்கு ,மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் தமிழில் முதல் முதலில் சித்திரம் பேசுத திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி வெயில், கூடல் நகர், ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் வாழ்த்துக்கள் ,அசல் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்து மார்க்கெட் பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென இவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார். பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இதற்கு காரணம் அவரது வாழ்க்கையில் நடந்த மிக மோசமான ஒரு சம்பவம் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி கலந்து கொண்ட பாவனாவிடம் இந்த அளவுக்கு இத்தனை ஆண்டுகள் சினிமாவில் கேப் விட என்ன காரணம் என கேட்டதற்கு என்னை பற்றி நிறைய வதந்திகள் வந்தது. வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பி விட்டார்கள். சிலருடன் என்னை சேர்த்து வைத்து பேசினார்கள். அதெல்லாம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது.

அதையும் மீறி எல்லை மீறி ஒரு விஷயத்தை சொன்னார்கள். அது என்னவெனில் நான் உயிரோடு இருக்கும்போது இறந்து விட்டதாக வதந்திகளை கூறினார்கள். இதுபோன்ற சில கசப்பான அனுபவங்களால் என்னால் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. அதுதான் நான் சினிமாவை விட்டு விலக காரணம் என பாவனா கூறி இருக்கிறார். தற்போது அவர் பிஸியாக படங்களில் நடித்து வருவது இது குறிப்பிடத்தக்கது.