தேவயானி தம்பி என்னை துரோகியாக பாக்குறான் – ராஜகுமாரன் வேதனை!

தேவயானி தம்பி என்னை துரோகியாக பாக்குறான் – ராஜகுமாரன் வேதனை!

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்திலும் 2000ம் காலகட்டத்திலும் பிரபலமான நடிகையாக வலம் கொண்டு இருந்த தேவயானி பிரபல இயக்குனரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள்.

இவர்களது திருமணம் ரகசியமான முறையில் நடைபெற்றதால் பெற்றோர்கள் சம்மதம் இன்றி நடைபெற்றது. தேவயானி தனது குடும்பத்தாரை எதிர்த்து தான் ராஜ்குமாரனை கரம் பிடித்தார். அப்போது தேவயானியின் தம்பியான நடிகர் நகுல் அக்காவின் இந்த செயலால் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது .

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மாமாவான ராஜகுமாரன் உடன் பேசுவதே கிடையாதாம். அவரை இன்று வரை துரோகியாகவே பார்க்கிறார் என ராஜ்குமாரின் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். தேவயானி காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தேவயானி கூட நகுல் பேசுவதே கிடையாது.பின்னர் காலங்கள் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக மாறினார் என கூறியுள்ளார்.