இதற்காக தான் விஜய்யை சந்தித்தேன்… சர்ச்சைக்கு முடிவு கட்டிய ரம்பா!

இதற்காக தான் விஜய்யை சந்தித்தேன்… சர்ச்சைக்கு முடிவு கட்டிய ரம்பா!

அண்மையில் நடிகை ரம்பா தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து விஜய்யை நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.

மேலும், இதுகுறித்து இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், ரம்பா விஜய்யை சந்தித்தது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.அதாவது , என் குழந்தைகள் விஜய்யை பார்க்க ஆசைப்பட்டனர். அதனால் விஜய்யின் மேனேஜரை தொடர்பு செய்து கேட்டேன். உடனே விஜய் நேரம் ஒதுக்கி என் குழந்தைகளுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்தார்.

அவர் என் குழந்தைகளுடன் நீண்ட நேரம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவருடன் நடித்த காலங்களில் மிகக்குறைவாக பேசுவார். லியோ படத்திற்கு பின் விஜய்யின் ரசிகராக என் மகன் மாறிவிட்டான், அதனால் தான் விஜய்யை சந்தித்தோம் என்று கூறியிருக்கிறார்.