வயசு பசங்களை சீரழித்ததே தனுஷ் குடும்பம் தான் – பிரபல இயக்குனர் பகீர்!

வயசு பசங்களை சீரழித்ததே தனுஷ் குடும்பம் தான் – பிரபல இயக்குனர் பகீர்!

தனுஷின் சினிமா கெரியரில் 50வது திரைப்படமாக சமீபத்தில் வெளியாகி சக்கபோடு போட்டு வரும் திரைப்படம் தான் “ராயன்” இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது.

இத்திரைப்படத்திற்கு பெரும்பாலான ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி, ராயன் படத்தை கடுமையாக சாடி இருக்கிறார்.அவர் கூறியதாவது, வயசு பசங்களை சீரழித்ததே தனுஷின் குடும்பம் தான். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவை கசகசவென ஆக்கிவிட்டார் தனுஷ்.

அப்பனை திட்டுவது, அப்பன் முன்னாடி தண்ணி அடிப்பது, அப்பன் முன்னாடி மகன் தப்பு பண்ணுவது என்று கலாச்சார சீரழிவை சினிமாவில் முதலில் கொண்டு வந்ததே தனுஷ் குடும்பம் தான். கொலை குற்றங்கள் நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு காரணம் சினிமாக்காரர்கள் தான்.

சாதி, வன்மம் எல்லாற்றையும் தனுஷ் படம் தூண்டுகிறது. தனுஷ் புத்திச்சாலி தான், அவரின் சாதனை பெரிது. ஆனால், இவர்கள் எம்ஜிஆரை ரோல் மாடலாக வைத்திருக்க வேண்டும். 50 வது படம் ரொம்பவே கொடூரமாக இருக்கிறது அதை கம்மி பண்ணுங்க என்று பிரவீன் காந்தி விமர்சித்துள்ளார்.

இயக்குனர் பிரவீன் காந்தி, praveen gandhi , தனுஷ் , ராயன் திரைப்படம்,