“தங்கலான்” படம் எப்படி இருக்கு..? படம் பார்த்த தயாரிப்பாளரின் முதல் விமர்சனம்!

“தங்கலான்” படம் எப்படி இருக்கு..? படம் பார்த்த தயாரிப்பாளரின் முதல் விமர்சனம்!

நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோத் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். மற்றொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கேஜிஎஃப் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் விக்ரம் வித்யாசமான மிரட்டலான தோற்றத்தில் நடித்து மிரள வைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தங்கலான் படத்தை பார்த்தவுடன் உடனடியாக விக்ரம் மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இருவருக்கும் போன் கால் செய்து பேசினேன். படத்தின் முதல் பாதி பார்க்கும்போதே எனக்கு ஆனந்த் கண்ணீர் வந்துவிட்டது. இந்த மாதிரி திரைப்படத்தை நான் தயாரித்து இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது” என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.