நடிகை பார்வதி நாயரின் தகாத செயற்பாட்டால் அவர் மீது வழக்குப் பதிவு!

நடிகை பார்வதி நாயரின் தகாத செயற்பாட்டால் அவர் மீது வழக்குப் பதிவு!

 

தமிழில் வெற்றி படங்களான,அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் நிமிர் படத்தில் நடித்துள்ளார் பார்வதி நாயர்.

தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டில் பணிபுரிந்த சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் மீது கைக்கடிகாரம் லப்டொப் ஐபோன் என்பவற்றை திருடிச் சென்றதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.அதன் அடிப்படையில் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தன்னிலை யில் தன்மீது பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் பார்வதி நாயர் மற்றும் அவரது உதவியாளர்கள் அடித்து தன்மீது துப்பி அசிங்கப் படுத்தியதாகவும் அந்த நபர் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் பார்வதி நாயர் உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Parvati nayar,Tamil news,crime.