போதும்…. வீட்ட போங்க… தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும் அரசியல்வாதிகள்

போதும்…. வீட்ட போங்க… தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும் அரசியல்வாதிகள்

ஆசை யாரைத் தான் விட்டது என்பார்கள். அதுபோல சாகும் வரை MP யாக இருக்க வேண்டும். ஆனால் தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் பெற்றுக்கொடுக்க கூடாது, என்பதில் இவர்கள் குறியாக உள்ளார்கள். இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இளைஞர்களுக்கும் வழி விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தள்ளாடும் வயதில் இருக்கும் சுத்துமாத்து சுமந்திரனும், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி மாறாட்ட குணத்தில் அலையும் ஸ்ரீ வாத்தியும் , மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக நேற்று அறிவித்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். ஆனால் வட கிழக்கில் தற்போது மக்களின் மன நிலை மாறிவிட்டது. இளைஞர்களே தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதனால் தென்னிலங்கையில் கூட 30க்கும் மேற்பட்ட மூத்த அரசியல் தலைவர்கள் இம்முறை போட்டி இடுவது இல்லை என்று என்று கூறி ஜெகா வாங்கி விட்டார்கள்.

இருந்தாலும் இந்த தமிழ் அரசியல்வாதிகள் திருந்திய பாடாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.