இந்திய ஜனாதிபதி முன்பாக பல விருதுகளை பெற்றார் திரு சுபாஷ்கரன் ! பொன்னியின் செல்வன் …

இந்திய ஜனாதிபதி முன்பாக பல விருதுகளை பெற்றார் திரு சுபாஷ்கரன் ! பொன்னியின் செல்வன் …

புது டெல்லியில், இந்தியாவின் 70வது தேசிய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. நாடு தழுவிய ரீதியில் பல திரைப்படங்களை தெரிவு செய்து. மிகவும் நல்ல திரைப்படங்களுக்கு டெல்லியில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் திரு அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்கள் தயாரித்த , “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது.

மிகவும் கெளரவமான இந்த விருத்தைப் பெற, திரு சுபாஷ்கரன் அவர்கள் டெல்லி சென்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. பொதுவாக ஹிந்திப் படங்களே பல விருதுகளை தட்டிச் செல்வது வழக்கம். மாறாக இம்முறை பொன்னியின் செல்வன் பல விருதுகளை பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. சிறந்த தயாரிப்பாளராக திரு சுபாஷ்கரன் அவர்கள் தெரிவாகி, இந்திய ஜனாதிபதியின் கைகளால் விருதைப் பெற்றுள்ளார்.

சிறந்த இயக்கம், சிறந்த இசைக்காக ரகுமானுக்கும் விருதுகள் கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அவர்கள் மேலும் ஒரு இமயத்தை தொட்டுள்ளார் என்று தான் கூறவேண்டும்.