சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாக நிலை! பைத்தியசாலை கூட அழைக்க செல்ல முடியாத நிலையில் உள்ள சமந்தா!

சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாக நிலை! பைத்தியசாலை கூட அழைக்க செல்ல முடியாத நிலையில் உள்ள சமந்தா!
 சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிட்டாடல் வெப் சீரிஸ் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சமந்தாவின் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியானது. தனிப்பட்ட பிரச்னைகள், உடல்நல பிரச்னை என தடைகளை தாண்டி அந்தப் படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் படுதோல்வியடைந்தது. அதனையடுத்து நடிப்பிலிருந்து குட்டி பிரேக் எடுத்தார் அவர். அதற்கு காரணம் அவரது உடல்நல பிரச்னைதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் சமந்தாவோ அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தார்..

சூழல் இப்படி இருக்க இப்போது அவர் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட வெப் சீரிஸை இந்தியாவில் ரீமேக் செய்திருக்கிறார்கள் ராஜ்&டிகேவும். இவர்கள் ஏற்கனவே சமந்தாவை வைத்து ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 7ஆம் தேதி சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆக்‌ஷன் சமந்தா: ட்ரெய்லருக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார் சமந்தா. மேலும் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அட சமந்தா பின்னி பெடலெடுக்கிறாரே என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிடுகின்றனர். நிச்சயம் இந்த வெப் சீரிஸ் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சமந்தா.

இரண்டாவது திருமணம்: இதற்கிடையே அவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களில் அவர்கள் தங்களது பிரிவை அறிவித்தனர். சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஹைதராபாத்தில் சிம்பிளாக நடந்து முடிந்தது. திருமணமும் விரைவில் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “எனக்கு வந்த மையோசிடிஸ் நோயின் காரணமாக பல விஷயங்களை நான் மறந்துவிட்டேன். ஞாபக மறதியால் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாருமே இல்லை. அதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறேன்” என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு இவ்வளவு கஷ்டம் வந்திருக்கவேகூடாது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.