இப்ப தோணுது, நான் தப்பு பண்ணிட்னோடு சமந்தா கவலை கண்ணீர்

இப்ப தோணுது, நான் தப்பு பண்ணிட்னோடு சமந்தா கவலை கண்ணீர்

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை சமந்தா பெற்று வருகிறார்.

படத்தின் பிரமோஷனுக்காக கொடுத்த பேட்டியொன்றில், இந்த சீரிஸில் நீங்கள் ஸ்பை ஏஜெண்ட்டாக நடித்திருக்கிறீர்கள், நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டு இருக்கிறீர்களா? என்று சமந்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா, நிஜ வாழ்க்கையில் கூட நான் அப்படி செய்ய வேண்டியிருந்தது.

அப்படி செய்யாமல் இருந்தது என்னுடைய மிகப்பெரிய தவறு. ஸ்பை ஆகாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என்று சமந்தா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சமந்தாவை, நாக சைதன்யா பிரிவதற்கு முன்பே சோபிதாவுடன் தொடரில் இருந்ததை சமந்தாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடித்திருந்தால், சமந்தா எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பார், எல்லாம் நடந்துவிட்டது பின் வருத்தப்பட்டு பயனில்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

samantha , naga chaitanya ,divorce,cinima news.