விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – விரைவில் அறிவிப்பு!

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – விரைவில் அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையால் முன்னேறி வளர்ந்து இன்று டாப் நடிகர் என்ற அந்தஸ்தில் உயர்ந்திருக்கிறார். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழிகளில் திறமையை வெளிக்காட்டி மிகச்சிறந்த நடிகராக தென்பட்டு வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் நடித்து வரும் நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவை திருமணம் செய்யும் போது தனுஷ் அவ்வளவு பெரிய ஹீரோவாக இல்லை.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் ரஜினி உதவியுடன் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இதனிடையே திடீரென கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தங்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்து தற்போது வரை இருவரும் தனித்தனியே தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று விவாகரத்து வேண்டும் என முறையாக கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். இதுகுறித்து இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் 2004-ல் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். எனவே விரைவில் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.