தோண்டத் தோண்ட பூதம் வெளியான கதையாக மாறியுள்ள ஹபீபர் கொலை MET பொலிசார் குழப்பம்

தோண்டத் தோண்ட பூதம் வெளியான கதையாக மாறியுள்ள ஹபீபர் கொலை MET பொலிசார் குழப்பம்

கடந்த 13 தினங்களுக்கு முன்னர் , லண்டன் பிராட்பேட்டில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் வைத்து 27 வயதுப் பெண் ஒருவரைக் கொலை செய்தார் ஹபீபர் என்ற 25 வயது நபர். இவர் பங்களாதேஷை சேர்ந்தவர். லண்டனுக்கு விசா எடுத்து வந்துள்ளார். அவர் கொலை செய்த பெண் அவரது முன் நாள் காதலி என்று பொலிசார் நம்பினார்கள். குறித்த பெண், சில காலமாக லண்டனில் தனது கணவரோடு வாழ்ந்து வந்த நிலையில். அவருக்கு ஒரு கை குழந்தையும் இருக்கிறது.

இன் நிலையில் தான் குறித்த பெண்ணை, கத்தியால் 4 தடவை குத்தி ஹபீபர் கொலைசெய்தார். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று பொலிசார் தோண்டத் தோண்ட பெரும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளது. முதலில் இறந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த தகவலின் படி, ஹபீபர் தமது மகளின் முன் நாள் காதலன் என்று கூறி இருந்தார்கள். அத்தோடு பொலிசார் இறந்த பெண்ணின் கணவரையும் கைதுசெய்து பின்னர் விடுவித்துள்ள நிலையில். திடீரெனப் பார்த்தால்.

ஹபீபர் பங்களாதேஷில் இந்தப் பெண்ணை திருமணம் முடித்து இருக்கும் புகைப்படங்கள் சிக்கியுள்ளது. அதனால் ஹபீபர் காதலன் அல்ல, முன் நாள் கணவர் என்பது பொலிசாருக்கு தெளிவாகியுள்ளது. கொலை செய்வதற்காகவே அவர் பங்களாதேஷில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார் என்பது ஒரு புறம் இருக்க இந்தக் கொலையில் வேறு என்ன மர்மங்கள் இருக்கிறதோ தெரியவில்லை. கொலைசெய்து விட்டு பல நாட்களாக மறைந்து வாழ்ந்து வந்த ஹபீபரை பொலிசார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளார்கள். இனித் தான் பல மர்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகும் போல இருக்கே ?

Source: https://www.dailymail.co.uk/news/article-13296359/Kulsuma-Akter-picture-Habibur-Masum-murder-charge-Bradford.html