அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் – இளையராஜா பேச்சு

அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் – இளையராஜா பேச்சு

சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாணக்யா மீடியா சி.இ.ஓ ரங்கராஜ் பாண்டே, இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை- 1 படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு, பாடல்களும் வைரலானது.

இந்த நிலையில், சினிமாவில் இளையராஜா தேர்ந்தெடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாணக்யா மீடியா சி.இ.ஓ ரங்கராஜ் பாண்டே, இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய இளையராஜா, என்னை இசை ஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.