அண்ணன் முரளியிடம் சிபாரிசு கேட்காத டேனியல் – ஏன் தெரியுமா?

அண்ணன் முரளியிடம் சிபாரிசு கேட்காத டேனியல் – ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர்தான் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர்ச்சி கொடுப்பார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக காக்க காக்க திரைப்படத்தில் இவரது நடிப்பு இன்றளவு மிகப்பெரிய அளவில் பேசப்படும் டானியல் பாலாஜி தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, வடசென்னை மற்றும் பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் அதிரடியான அதிரடியான வில்லனாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வட சென்னை மற்றும் பொல்லாதவன் படத்தில் நடித்த போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தது காக்க காக்க மற்றும் வேட்டையாடு.

இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் திடீரென உயிரிழந்து விட்டார். இவரது மரணத்தை திரையுலகினரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தொடர்ந்து அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் டேனியல் பாலாஜி குறித்த ஒரு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இவரது அண்ணன் தான் நடிகர் முரளி முரளி தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்தபோது அவரை சந்தித்து தனக்கான வாய்ப்பு தேடி கொடுங்கள் என்று இதுவரை எந்த ஒரு சிபாரிசும் கேட்டதே கிடையாதாம். காரணம் தனது சொந்த முயற்சியால் முன்னுக்கு வரவேண்டும்.

தனது சொந்த முயற்சியால் உயர்ந்து தனது திறமையால் மட்டுமே ஜொலித்து நிற்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இருந்தாராம் டேனியல் பாலாஜி. அதற்காக தனது அண்ணனை நேரில் சந்திப்பதையே அவர் விட்டுவிட்டாராம். காரணம் தனது அண்ணனை நேரில் சந்தித்தால் இவர் சிபாரிசு கேட்க தான் வருகிறார் என மற்றவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக அவரை சந்திப்பதையே தான் விட்டுவிட்டதாக பேட்டி ஒன்றின் டேனியல் பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.