ஐஸ்வர்யா புதிய வீடு வாங்கியதன் காரணம்… புது புரளி கிளப்பிய பயில்வான்!

ஐஸ்வர்யா புதிய வீடு வாங்கியதன் காரணம்… புது புரளி கிளப்பிய பயில்வான்!

சமீப நாட்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் விவாகரத்து விவகாரம் தான் சமூக வலைதளங்கள் முழுக்க தீயாய் பரவி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் விரைவில் விவாகரத்து செய்யவும் இருக்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வை வெளியாகலாம்.

இப்படியான நேரத்தில் திடீரென ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகப்பெரிய பங்களா வீடு ஒன்றை வாங்கி அதை கிரகப்பிரவேசம் செய்துள்ளார். அதில் தனது பெற்றோர்களான ரஜினி மற்றும் லதா இருவரையும் அழைத்து வீட்டை சுற்றி பார்த்து குத்து விளக்கு ஏற்றி வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்த போட்டோக்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாக பலரும் அவருக்கு பாராட்டுக்கள் குவித்தனர்.

இந்த நேரத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படி ஒரு பங்களா வீட்டை வாங்க காரணம் என்ன/ என்று பிரபல பத்திரிகையாளர் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகத்துக்கு விவாகரத்துக்கு பிறகு சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடன், சுறுசுறுப்பாவும் செயல்பட்டு வருகிறார்.

தன்னுடைய சொந்த உழைப்பில் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என அவர் பல முயற்சிகளையும் பல ரிஸ்க்லையும் எடுத்து வருகிறார். அதில் ஒரு அதில் ஒன்றுதான் இந்த புதிய வீடு. அதற்காக அவர் ரஜினி கோடிக்கணக்கில் சொத்து வைத்திருந்தாலும் கூட அதையெல்லாம் வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு தனது குழந்தைகளுடன் தனி வீட்டில் தனது சொந்த முயற்சியில் வாழ முயற்சி எடுத்து இருக்கிறார் என பயில்வான் கூறியிருக்கிறார். இதனை அடுத்து பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.