லண்டனில் தப்பி ஓடிய கொலையாளி மெற்றோ பொலிடன் பொலிசார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை – அதிர்ச்சி தகவல் !

லண்டனில் தப்பி ஓடிய கொலையாளி மெற்றோ பொலிடன் பொலிசார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை – அதிர்ச்சி தகவல் !

எதுவுமே அறியாத ஒரு இளைஞரைப் போல இங்கே காணப்படும் நபர் மிகவும் பயங்கரமானவர் என்று மெற்றோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். வெறும் 25 வயதே ஆகும் ஹபீபர் என்ற இந்த இளைஞர், உடைகள் வாங்கிக் கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் 5 தடவை கத்தியால் குத்தியுள்ளார். இதேவேளை அவர் அந்தப் பெண்ணின் பிளையையும் தாக்க முற்பட்டவேளை. கத்திக் குத்துக்கு இலக்கான அந்தப் பெண், தனது பிள்ளை இருந்த “பிராம்” (தள்ளுவண்டியை) தூர தள்ளி விட்டார்.

இதேவேளை மக்கள் இவரைப் பார்த்தும் விட்டார்கள், அதனால் பிள்ளையைக் கொல்ல முடியாமல் ஹபீபர், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தற்போது பொலிசார் தனிப்படை ஒன்றை அமைத்து இவரை தேடி வருகிறார்கள். ஆனால் சிக்கவில்லை. இவர் தங்கி இருந்த இடம், இவரது நண்பர்கள் வீடு என்று சகல இடங்களையும் பொலிசார் சல்லடை போட்டு தேடிவருகிறார்கள். லண்டன் பிராட்பேஃட் நகரில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

தற்போது ஹபீபர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் வீதிகளில் அல்லது ஏதாவது பூங்காவில் மறைந்து இருக்கக் கூடும் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இவரைப் பார்த்தால் உடனே பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அவர்கள் மேலும் எச்சரித்துள்ள நிலையில். மேலும் சில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் செங்கன் விசா என்று அழைக்கப்படும், ஏஊ விசா ஒன்றை எடுத்து. அதன் பின்னர் இலகுவாக பிரித்தானிய விசாவை எடுத்து ஹபீபர் பிரிட்டனுக்குள் வந்துள்ளார். அதன் பின்னர் இந்தக் கொலையைச் செய்துள்ளார். இது மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை என்று பொலிசார் சந்தேகமடைந்துள்ளார்கள்.