பார்த்திபன் என் மகளிடம் அப்படி நடந்துக்கொண்டார்…. மேடையில் கலங்கிய வனிதா!

பார்த்திபன் என் மகளிடம் அப்படி நடந்துக்கொண்டார்…. மேடையில் கலங்கிய வனிதா!

சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா விஜயகுமார் 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார். இதனிடையே அப்பா விஜய்குமாருடன் சண்டை போட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதன் மூலம் தான் இருக்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

சர்ச்சைகளில் பிக்பாஸில் நுழைந்து அங்கும் சண்டை , வாக்குவாதம் என பிரபலம் அடைந்தார். மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டு பெரும் விமர்சனத்தை சந்தித்தார்.3வது கணவர் பீட்டர் பால் குடித்துவிட்டு ரகளை செய்வதாக அவரை விவாகரத்து செய்துவிட்டார் வனிதா.

இதையடுத்து தனது மகளுடன் தனிமையாக வாழ்ந்து வந்த வனிதா மகள் ஜோதிகாவை பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக அனுப்பி வைத்தார். அதன் மூலம் ஜோவிகா பிரபலமான தொடர்ந்து விதவிதமான கெட்டப்பில் மேக்கப் போடு மகளை போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனிடையே ஜோவிகா பிரபல இயக்குனர் பார்த்திபனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய வனிதா, “எனது வாழ்நாளில் இதற்கு முன்பாக எத்தனையோ படங்களின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுக்கு சென்றிருக்கிறேன்.

ஆனால் இது எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஆடியோ வெளியீட்டு விழா ஆகும். ஜோவிகா இதில் நடித்திருந்தால்கூட சந்தோஷம் அடைந்திருக்கமாட்டேன். உதவி இயக்குநர்: முதன்முதலாக நான் பி.வாசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன்.

அதற்கு பிறகு பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இணைந்தேன். இன்று எனது மகள் ஜோவிகா இந்த டீன்ஸ் திரைப்படத்தில் பார்த்திபனுக்கு உதவி இயக்குநராக இருக்கிறார். அதனை நான் நினைத்து ரொம்பவே பெருமைப்படுகிறேன். பார்த்திபன் சார் என் மகளுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கிறார் என கூறி ஒரு தாயாக கலங்கி பெருமை பட்டார்.