ஏமாற்றிய முதல் மனைவி… 51 வயசில் பிரசாந்த்துக்கு மறுமணம் – அதிரடி அறிவிப்பு!

ஏமாற்றிய முதல் மனைவி… 51 வயசில் பிரசாந்த்துக்கு மறுமணம் – அதிரடி அறிவிப்பு!

90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகராக வளர்ந்து வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் காதல் மன்னன் பெண்களின் நாயகன், பெண்கள் ரசிகன் என பல்வேறு பல்வேறு அடைமொழிகளுடன் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். முதன்முதலில் முதன் முதலில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான பிரசாந்த் வெகு சீக்கிரத்திலேயே தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஜாம்பவானாக வலம் வரத் துவங்கினார்.

இவர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அஜித் விஜய் எல்லாம் திணறும் அளவிற்கு அதிக வளர்ச்சி அடைந்தார். இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இருந்திருந்தால் இந்நேரம் அஜித் விஜய் எல்லாம் இந்த லெவலுக்கு இருந்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு பிரபலமான நடிகராக பிரசாந்த் வளம் வந்து கொண்டிருந்தார்.

குறிப்பாக செம்பருத்தி, ஜீன்ஸ், காதல், ஜோடி, வின்னர் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் கடந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் திருமணம் ஆன பெண் என்பது பிரஷாந்துக்கு ஹனிமூன் சென்ற போது தான் தெரியவந்துள்ளது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தன்னை இப்படியே ஏமாத்திவிட்டார் என்ற மன உளைச்சலில் அவரை பிரிந்து விட்டார்.

விவாகரத்திற்காக கோர்ட் கேஸ் என அலைந்துக்கொண்டிருந்த பிரசாத்துக்கு திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்த முடியாமல் போனது. அதனால்தான் அவரது மார்க்கெட் சரிந்து போனது. தற்போது வரை 51 வயதாகும் பிரசாந்த் இதுவரை திருமணமே செய்யாமல் சிங்கிளாக இருக்கிறார். இந்நிலையில் அது பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகனின் முதல் திருமணம் தான் தவறுதலாக போய்விட்டது.

ஆனால் இரண்டாம் திருமணம் சிறப்பான முறையில் நான் செய்து வைப்பேன். என தனது மகனின் மறுமணம் குறித்து முதன் முறையாக பேட்டி அளித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பிரசாந்துக்கு ஏதேனும் நடிகையை திருமணம் செய்து வைப்பாரா அல்லது ஏதேனும் சாதாரண பெண்ணை மணப்பெண்ணாக பார்த்து வாழ்க்கை சிறப்பாக வாழ வைப்பாரா என ரசிகர்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரஷாந்துக்கு அவரது அப்பா ரூ. 1 கோடியே 68 லட்சத்திக்கு பிரம்மாண்ட லக்ஸரி கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.