மரண தருவாயில் அப்பாவுக்கு சத்தியம் செய்து கொடுத்த டிடி – கண்ணீர் கடிதம்!

மரண தருவாயில் அப்பாவுக்கு சத்தியம் செய்து கொடுத்த டிடி – கண்ணீர் கடிதம்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சியில் பல்வேறு செலிப்ரட்டிகள் கலந்து கொண்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல ரகசிய விஷயங்களுக்கு கூறுவார்கள்.

குறிப்பாக dd பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்துவதில் நேர்தியானவர். அவர்களிடம் மிகவும் ஜாலியாக பேசி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி கலகலப்பாக மகிழ்விப்பார். கிட்டத்தட்ட டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு தனது தொகுப்பாளர் பணியிலே அவர் சிறந்து விளங்கி வருகிறார். இதனிடையே திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தந்தை குறித்த உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தொகுப்பாளியாக தனது பணியை செய்து வருமானம் சம்பாதித்து வரும் டிடியின் தந்தை திடீரென உடல்நிலை சரியில்லாத காரணமாக மரண தருவாயில் இருந்தாராம். அந்த சமயத்தில் டிடி தனது தந்தைக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். அதாவது நீங்கள் குடும்பத்தை பற்றி கவலைப்படாதீங்கப்பா நான் நம்முடைய குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என்னை சத்தியம் செய்து கொடுத்த சில மணி நேரத்திலே அவருடைய தந்தை மரணித்து விட்டாராம்.

அதன் பிறகு டிடி வாக்கு கொடுத்தபடியே தனது அக்கா பிரியதர்ஷினி உடன் இணைந்து தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வருகிறாராம். கிட்டத்தட்ட அவர் அவர் இறந்து 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது அவரை நினைவு கூர்ந்து இந்த விஷயத்தை தனது சமூக வலைதளங்களை வலைதள பக்கத்தில் கடிதம் ஆக வெளியிட்டு இருக்கிறார் டிடி. இந்த பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஏற்று வருகிறது குறிப்பிடுத்தக்கது.