யெமன் நாட்டின் மீது பிரித்தானிய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது !

யெமன் நாட்டின் மீது பிரித்தானிய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது !

 

BREAKING NEWS :  22.01.2024 — 23.14 PM  LIVE

கருங்கடலில் தற்போது ஒரு பலம் மிக்க சக்த்தியாக உருவெடுத்துள்ளது, “ஹவுத்தி”(Houthi) என்னும் இயக்கம். இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்க அவர்கள் அதனைப் பாவித்து, கருங்கடல் வழியாகச் செல்லும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை தாக்க ஆரம்பித்தார்கள். இது சற்று வளர்ச்சியடைந்து, அமெரிக்க போர் கப்பலை தாக்கும் அளவு சென்றுவிட்டது. இதனால் விழித்துக் கொண்ட அமெரிக்கா, ஹவுத்தி இயக்கம் பற்றிய தகவல்களை திரட்ட ஆரம்பித்தவேளை. பிரித்தானிய உளவுத் துறையிடம் ஏற்கனவே ஹவுத்தி இயக்கம் பற்றி பல தகவல்கள் இருந்துள்ளது தெரிய வந்த நிலையில்…

யெமன் நாட்டில் எல்லையில் உள்ள சிறிய கிராம் ஒன்றில் அவர்கள் இயங்கி வருவது தெரியவந்தது. அங்கே ஏவுகணைத் தளம் தொடக்கம் படு பயங்கரமான ஆயுதங்கள் இருந்தது. அந்தக் கிராமத்தை நெருங்க முடியாத வகையில், அவர்களிடம் சிறப்பான வான் எதிர்ப்பு கட்டமைப்பும் இருந்துள்ளது. ஆனால் இந்த அனைத்து தகவலையும் முன்னரே அறிந்து வைத்திருந்த பிரித்தானியா , ராடர் கண்களில் மண்ணைத் தூவி பறந்து சென்று தாக்கவல்ல, தனது “டைஃபூ” விமானத்தை அங்கே அனுப்பி, பல தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரயிட்டர் செய்திச் சேவை சற்று முன்னர் அறிவித்துள்ளது. இதனால் ஹவுத்தி இயக்கத்தின் பல தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க இந்த உளவுத் தகவலை பிரித்தானியா ..

அமெரிக்காவுக்கும் பகிர்ந்த நிலையில், அமெரிக்க போர் விமானங்களும் குறித்த இடத்திற்குச் சென்று கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. யெமன் நாட்டு வான் எல்லைக்குள் அத்து மீறிப் புகுந்து இந்த தாக்குதலை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஆனால் யெமன் நாட்டால் என்ன செய்ய முடியும். அப்படியே வேடிக்கை தான் பார்க்க முடியும்.