சௌந்தர்யா ரஜினி இயக்கும் படமும் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையா?

சௌந்தர்யா ரஜினி இயக்கும் படமும் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையா?

ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இதையடுத்து சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக்கொண்ட அவர் இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளதாகவும், அந்த படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் பயோபிக் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாலர் சஜித் நாடியவாலா தயாரிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் சஜித் நாடியவாலா சந்திப்பு நடந்ததும் இந்த படம் சம்மந்தமாகதான் என சொல்லப்படுகிறது.