அண்ணனனை காக்க வைத்துவிட்டு வேறு படத்துக்கு சென்ற ஜெயம் ரவி…

அண்ணனனை காக்க வைத்துவிட்டு வேறு படத்துக்கு சென்ற ஜெயம் ரவி…

2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வில்லன் வேடத்துக்கு அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைஃப் படத்தில் நடிக்க உள்ளதால், அந்த படத்தை முடித்துவிட்டுதான் தனி ஒருவன் 2 வில் நடிக்க வருவேன் என அண்ணன் மோகன் ராஜாவிடம் சொல்லிவிட்டாராம். அதனால் தனி ஒருவன் 2 இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது.