ஓட்டு போட வராதது ஏன்? பூதாகரமான சர்ச்சைக்கு ஜோதிகா பதில்!

ஓட்டு போட வராதது ஏன்? பூதாகரமான சர்ச்சைக்கு ஜோதிகா பதில்!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஒரு காலகட்டத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ஜோதிகா. இவர் மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்து சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின்னர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்தே நிறுத்திவிட்ட ஜோதிகா பின்னர் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனிடையே மீண்டும் மும்பைக்கு சென்று செட்டிலாகி இருக்கும் அவர் அண்மையில் சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் மாபெரும் சாதனை படைத்தது. அடுத்ததாக தற்போது “ஸ்ரீகாந்த்” எனும் இந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. அப்போது சமூக பொறுப்பு குறித்து பக்கம் பக்கமாக பேசும் நீங்கள் ஏன் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை என பலரும் விமர்சித்தார்கள்…. அதற்கு உங்களின் பதில் என்ன?என பத்திரிகையாளர் கேட்டதற்கு….

நடிகைகளாகிய எங்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கும் அது எல்லாவற்றையும் பொது வெளியில் சொல்ல முடியாது. சில சமயங்களில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். சொந்த காரியங்களுக்காக வெளியூருக்கு செல்லலாம். வேலை விஷயமாக வெளியூரில் இருக்கலாம். வரமுடியாத சூழலில் ஆன்லைன் மூலமாக கூட ஓட்டு போடலாம். அந்த ஆப்ஷன் இருக்கு எல்லா விஷயத்தையும் பொதுவெளியில் சொல்ல முடியாது என ஜோதிகா நறுக்குன்னு பதில் கொடுத்தார்.