அரண்மனை போல் 3வது வீடு வாங்கிய ராஷி கண்ணா

அரண்மனை போல் 3வது வீடு வாங்கிய ராஷி கண்ணா

டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகையான ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கிறார். இந்தியில் வெளியான மெட்ராஸ் கபே படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி தெலுங்கில்
ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்த அவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் அடங்க மரு, சங்கத்தமிழன் , துக்ளக் தர்பார் , அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ராசி கண்ணா ஹைதராபாத்தில் மூன்றாவது வீட்டை வாங்கி இருக்கிறார். அவர் பல கோடி கொடுத்து வாங்கி இருக்கும் புது வீட்டின் கிரஹப்ரவேசம் இன்று நடந்து முடிந்து இருக்கிறது. குடும்பத்துடன் அவர் புது வீட்டில் பூஜை செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
சுமார் 58 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் ராசி கண்ணா வாங்கி இருக்கும் மூன்றாம் வீடு அரண்மனை போல இருக்கிறது.