5 முறை காதல் தோல்வி… காரணம் இது தான் – விஜய் ஆண்டனியின் சோகக்கதை!

5 முறை காதல் தோல்வி… காரணம் இது தான் – விஜய் ஆண்டனியின் சோகக்கதை!

இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் கலக்கிக்கொண்டிருப்பவர் வீஜய் ஆண்டனி கடந்த 25 ஆம் ஆண்டு சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

குறிப்பாக இவர் 2012 வெளிவந்த நான் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து சலீம் பிச்சைக்காரன் சைத்தான் எமன் அண்ணாதுரை உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வந்தார்.

இதனிடையே ஹீரோ இசையமைப்பாளர் என படு பிசியாக இருந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி பாடல் கச்சேரிகளுக்கு பாடல்களும் பாடி அதன் மூலம் வருமானத்தை சம்பாதித்து வருகிறார் தற்போது விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி நடிப்பில் வெளியாகியிருக்கும் ரோமியோ படம் கலவையான கலவையான விமர்சனத்தை சந்தித்துள்ளது.

இருந்தாலும் இப்படத்தின் மேக்கிங்கில் ஒன்றுமே இல்லை என கூறுகிறார்கள். இதனால் விஜய் ஆண்டனி ஹிட் லிஸ்டில் இந்த படம் இணையவில்லை. இந்த படத்தின் ப்ரோமோஷனில் பேசியுள்ள விஜய் ஆண்டனி தனது தோல்விகளை குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் பேசியாதவது “நான் ஐந்து முறை காதலில் தோல்வி அடைந்திருக்கின்றேன். ஆறாவது முறையாக காதலித்த பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். எனது எளிமையான வாழ்க்கை முறைதான் ஐந்து காதல் தோல்விகளை சந்ல்தித்ததற்கு காரணம். நான் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் வளர்ந்திருக்கிறேன். வளர்க்கப்பட்டேன். எனது எளிமையும், வாழ்க்கை முறையும் பெண்களுக்கு பிடிக்கவில்லை” என கூறினார் .