நீ என்கூட தான் முதலில் பண்ணனும்? பாலா படத்தில் இருந்து விலகிய பிரகதி!

நீ என்கூட தான் முதலில் பண்ணனும்? பாலா படத்தில் இருந்து விலகிய பிரகதி!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பிரகதி. இவர் சிங்கப்பூரில் பிறந்து கலிபோர்னியாவில் வளர்ந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

தந்தை கற்பித்த கர்நாடக இசையை பயிற்றுவித்து அதன் பின்னர் பாடுவதில் திறமை கொண்ட நடிகை சூப்பர் சிங்கர் பிரகதி பாலாவின் தாரை தரப்பட்ட என்ற திரைப்படத்தின் துணை வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னர் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பாலா குறித்து பேசி இருக்கும் நடிகை பிரகதியின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக பாலா சார் இருந்தார். அவர் என்னை பார்த்தவுடன் உனக்கு நடிப்பதற்கு தகுதி இருக்கு நீ நடிப்பதாக இருந்தால் என்னுடைய படத்தில் தான் முதன் முதலில் நடிக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு அவர் கூறியபடி அவருடைய படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் துரதிஷ்டவசமாக அந்த படம் கைகூடி வரவில்லை. அதன் பிறகு சில படங்களில் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது ஒரு பெரியபட்ஜெட் படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறேன் என பிரகதி கூறி இருக்கிறார்.