அம்மா, அப்பா பிரிஞ்சது இதனால் தான்… அக்ஷரா ஹாசன் வேதனை!

அம்மா, அப்பா பிரிஞ்சது இதனால் தான்… அக்ஷரா ஹாசன் வேதனை!

நடிப்பின் நாயகன், உலக நாயகன் இப்படி சினிமா ரசிகர்களால் போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன். இவரது நடிப்பு படத்திற்கு படம் மிரள வைக்கும். அசாத்தியமான நடிப்பால் வித்தியாசமான கேரக்டர்கள் எத்தனை கொடுத்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பால் மிரட்டி எடுத்து விடுவார். குறிப்பாக கமலஹாசனுக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் .

கமல் வாணி கணபதி என்பவரை 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை பிரிந்து விட்டார்.அதை அடுத்து சரிகா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரிகாவுக்கு பிறந்தவர்கள் தான் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் 2004 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் கமல்ஹாசன் இளைய மகளான அக்ஷரா ஹாசன் தனது அப்பா அம்மா பிரிந்தது குறித்து பேட்டி ஒன்றில் மிகுந்த வேதனையோடு தெரிவித்திருக்கிறார். என்னுடைய அப்பா அம்மா பிரிஞ்ச சமயத்தில் அதை எப்படி ஹாண்டில் பண்ணுவது என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. எல்லா பசங்களும் பீல் பண்ற மாதிரி தான் நாங்களும் பீல் பண்ணோம்.

ஆனால் இதெல்லாம் சரியாகிவிடும் என்று எங்களுக்குள்ளே நானும் என் அக்காவும் மனதை தேற்றிக்கொண்டோம். என்னுடைய அப்பா அம்மா இல்லாத ஒரு கவலையை போக்கியவர் என்னுடைய அக்கா தான். என் பெற்றோர் நிலையிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டார். என்னுடைய அப்பா அம்மா இருவரும் சிறந்த காதல் ஜோடிகளாக தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுறிந்து பிரிந்து விட்டார்கள் என அக்ஷரா ஹாசன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.