3-து மகனுக்கு பிரம்மாண்டமாக பெயர்சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் – வீடியோ!

3-து மகனுக்கு பிரம்மாண்டமாக பெயர்சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன் – வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

“மெரினா” திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டுப் பிள்ளை ,மாவீரன் ,அயலான் இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நடித்து முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு தனது மாமன் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா எனும் பெண் குழந்தை முதலில் பிறந்தார். அதன் பின்னர் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பா பெயரான குகன் என்பதை சூட்டி அழகு பார்த்தார்.

பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இந்நிலையில், தற்போது 3வது குழந்தைக்கு சிவகார்த்திகேயன் பிரம்மாண்டமாக பெயர்சூட்டு விழா நடத்தியுள்ளார். மகனுக்கு “பவன்” என பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C9bdopfy3BG/