பல வருடம் பேசாமல் இருந்த பெற்றோருடன் மீண்டும் இணைந்த ஆல்யா மானசா!

பல வருடம் பேசாமல் இருந்த பெற்றோருடன் மீண்டும் இணைந்த ஆல்யா மானசா!

பிரபல சீரியல் நட்சத்திர ஜோடிகளான ஆல்யா மானசா – சஞ்சீவ் இருவரும் ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்ததன் ரியல் ஜோடியாக மாறியவர்கள். இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருக்கிறார்கள்.

அழகிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஆல்யா மானசா சஞ்சீவ் இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டி குடிபெயர்ந்தார்கள். வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்கு பல்வேறு பிரபலங்கள் வந்து வாழ்த்தி இருந்தார்கள். சஞ்சீவ் குடும்பத்துடன் தான் தற்போது வசித்து வருகிறார் ஆல்யா. தனது பெற்றோர்களை எதிர்த்து ஆல்யா சஞ்சீவை திருமணம் செய்துக்கொண்டதால் தனது ஆல்யா பல வருடங்களாக பேசாமல் இருந்து வந்தார்.

இப்படியான நேரத்தில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது பெற்றோருடன் இணைந்துள்ளார் நடிகை ஆல்யா மானசா. ஆம், அவரது கணவர் சஞ்சீவ், ஆல்யாவின் பெற்றோர்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அப்போது ஆல்யா மானசா தனது பெற்றோர்களுடன் எடுத்துக்கொண்ட அழகான லேட்டஸ்ட் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.