கல்யாணத்தில் கலந்துக்கொள்ள லட்சக்கணக்கில் காசு வாங்கிய பிரபலங்கள் – ஷாக்கிங் தகவல்!

கல்யாணத்தில் கலந்துக்கொள்ள லட்சக்கணக்கில் காசு வாங்கிய பிரபலங்கள் – ஷாக்கிங் தகவல்!

இந்தியாவின் பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் அண்மையில் மும்பையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு துறை நட்சத்திர பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த விஐபிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றார்கள்.

பல கோடி பட்ஜெட் பொருள் செலவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் தமிழ் திறையுலகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டார்கள். குறிப்பாக சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, ரஜினிகாந்த், இயக்குனர் அட்லீ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நடிகர் நாகார்ஜுன் பேட்டி ஒன்றில் திருமணங்களில் கலந்துகொள்ள சினிமா நட்சத்திரங்கள் காசு வாங்குகிறார்கள் என கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.