சைக்கோ நோயாளி மிகவும் ஆபத்தான பால-சங்கர் லண்டன் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் !

சைக்கோ நோயாளி மிகவும் ஆபத்தான பால-சங்கர் லண்டன் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் !

மிகவும் ஆபத்தானவர் என்று கருதப்படும், ஒரு வகையான மன நோயாளி, பாலசங்கர் நாரயனன் என்பவர், லண்டனில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் இருந்து, சூட்சுமமான முறையில் தப்பியுள்ளார். கடந்த காலங்களில் இவர் பெண்களைத் தாக்கியுள்ளார். இவர் பெண்களை கற்பழிக்கவில்லை என்றாலும். பெண்கள் பலரை பலமாகத் தாக்கி இருந்தார். பல சம்பவங்களுக்குப் பின்னர் பொலிசார் இவரை ஒரு வழியாக கைது செய்து, மன நோயாளர் காப்பக முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில்.

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இவர் தப்பித்துவிட்டார். இதனால் பொலிசார் மக்களின் உதவியை நாடியுள்ளார்கள். இவரைக் கண்டால் உடனே மெற்றோ பொலிடன் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவர் குறித்த இந்த(Greenford, Hammersmith, Highgate and Ilford) நகரங்களில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்.