“ஷோபனாவுக்கு” தேசிய விருது… மிகுந்த மகிழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் போட்ட பதிவு!

“ஷோபனாவுக்கு” தேசிய விருது… மிகுந்த மகிழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் போட்ட பதிவு!

 

பிரபல நடிகையும் பின்னணிப் பாடகியும் ஆன நித்யா மேனன் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். தான் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்துவிட்டு நடிகையாக அறிமுகம் ஆனார். நூற்றெண்பது, வெப்பம், உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா2 , 24, இருமுகன், சைக்கோ
திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்ததற்காக நித்யா மேனன் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை என்ற தேசிய விருதை வென்றார். 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார்.

 

நித்யா மேனன், nithya menon , nithya menon photos , cinema news