அந்த ரோலில் நடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதும் இதயம் நொறுங்கிவிட்டது – மிருனாள் தாகூர்!

அந்த ரோலில் நடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதும் இதயம் நொறுங்கிவிட்டது – மிருனாள் தாகூர்!

பாலிவுட் திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை மிருனாள் தாகூர். இவர் முதல் முதலில் சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெகு சில வருடத்திலேயே இவருக்கு தொடர்ச்சியான ஹிட் படங்கள் கிடைத்தது. இந்தியை தாண்டி தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தென்னிந்தியா சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

குறிப்பாக அந்த படத்தில் மிருனாள் தாகூர் நடிப்பு பல இளைஞர்களின் மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விட்டது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தை பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், “எனக்கு ரொம்பவும் கஷ்டமான விஷயம் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா ஒரு படத்துல நடிச்சு முடிச்சுட்டு வீட்டுக்கு திருக்கும்போது என்னுடைய இதயம் உடைவது போல் இருக்கும்.

ஏனென்றால் ஒரு கதாபாத்திரத்தை நாம் நேசித்து நடித்தோமேயானால் அவ்வாறாகவே மாறிவிடுகிறோம். அப்படித்தான் எனக்கு சீதா கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர ரொம்பவும் சிரமமாக இருந்து என்றும் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் இல்ல எங்களாலே இன்னும் அந்த சீதாராமம் படத்தில் இருந்து வெளிவரவே முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை என கூறி வருகிறார்கள்.