35 வயசோடு எல்லாத்தையும் முடிச்சுக்குவேன்… அதிர்ச்சி கொடுத்த துஷாரா விஜயன்!

35 வயசோடு எல்லாத்தையும் முடிச்சுக்குவேன்… அதிர்ச்சி கொடுத்த துஷாரா விஜயன்!

கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை தொண்டு கவர்ச்சி அழகை தெறிக்கவிட்டு சினமாவில் அறிமுகமான புதிதிலே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் முதன்முதலில் போதையேறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவில் அறிமுகமாக இருந்தார்.

அதை எடுத்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் மாரியம்மா என்ற ரோலில் ஆர்யாவின் மனைவியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் வசப்படுத்தி இழுத்தார்.

அப்படத்தில் இவரது நடிப்பும் மெட்ராஸ் பாஷை பேசி அசத்திய அந்த பேச்சும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. மேலும் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டுவிட்டார். இந்த திரைப்படம் அவரது ரேஞ்சே வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. இப்படத்திற்கு பிறகு திவ்யா பாரதி அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூக்கன், அநீதி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படு கவர்ச்சியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரும் கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். நல்ல கட்டு மஸ்தான உடல் தோற்றத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சி அழகை காட்டுவதை கைவந்த கலையாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு 26 வயசு ஆகிறது 35 வயசு வரைக்கும் நான் சினிமாவில் நடிப்பேன். அதன் பிறகு சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகி விடுவேன்.

காரணம் இந்த உலகத்தை நான் ரசித்து அனுபவிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. உலகம் முழுக்க பயணிக்க விரும்புகிறேன். அதற்காக 35 வயசுக்கு மேல் நான் நிச்சயம் நடிக்கவே மாட்டேன். இந்த உலகத்தில் பயணிக்காத நாடு இல்லை என்ற அளவிற்க்கு எல்லா நாடுகளுக்கும் பயணிக்க ஆசைப்படுகிறேன் என துஷாரா விஜயன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர் உங்களது கவர்ச்சி அழகியை பார்க்காமல் நாங்கள் எப்படி இருக்க?