10 வருட காதல்…. சாய்பல்லவி உருகி உருகி காதலிக்கும் நபர் யார் தெரியுமா?

10 வருட காதல்…. சாய்பல்லவி உருகி உருகி காதலிக்கும் நபர் யார் தெரியுமா?

அழகு நடிகையாகவும், வசீகரிக்கும் தோற்றத்தை கொண்டு நேச்சுரல் பியூட்டியாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்ப்பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

முதல் படமே அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பிரபலத்தையும் கொடுத்ததால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது. தற்போது ரன்பீர் கபூர் உடன் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் குறித்து பேசிய சாய் பல்லவி, “நான் 10 வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன். அபிமன்யு என்ற கதாபாத்திரத்தை தான் காதலித்து வருகிறேன். மகாபாரதம் கதையில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யு தான் அவர்” என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.