ஹனிமூனில் நடந்த அந்த சம்பவம் – வெட்கத்துடன் கூறிய ஐஸ்வர்யா ராய்!

ஹனிமூனில் நடந்த அந்த சம்பவம் – வெட்கத்துடன் கூறிய ஐஸ்வர்யா ராய்!

உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தமிழ், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஹாலிவுட் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்ம், குரு, ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யாராய் தனது கணவருடன் ஹனிமூன் சென்ற போது அங்கு நடந்த சம்பவம் ஒன்றைக் கூறி வெட்கப்பட்டுள்ளார். அதாவது ஹனிமூனுக்கு போராவுக்கு விமானத்தில் சென்றோம். அப்போது விமான பணிப்பெண் என்னை பார்த்தது திருமதி பச்சன் என சொன்னார்.

அந்த சமயத்தில் நானும் அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். எனக்கு திருமணம் ஆனதை அப்போது தான் உணர்தேன். நான் திருமதி பச்சன் ஆகிவிட்டதையும் அப்போது தான் ஞாபகம் வந்தது என்று ஐஸ்வர்யா ராய் வெட்கதுடன் தெரிவித்துள்ளார்.